ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் ஜோடி , மண வாழ்வில் இணைந்தனர்

இலங்கையிலும் , கடல் கடந்தும் மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம் எனும் பாடலுக்கு மெட்டு போட்டு இசையமைத்த சனுக விக்கிரமசிங்கவும் , பாடலை தமிழ் – சிங்கள இரு மொழிகளிலும் பாடிய விண்டி குணதிலக்கவும் காதலர்களாக இருந்து வந்தனர்.

சனுகா-விண்டி காதல் ஜோடி இன்று (26) தங்கள் வாழ்க்கையில் புதிய பக்கமாக திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவியாக அழகான வாழ்கை பயணத்தை தொடங்கினர்.

இவர்கள் இருவரது திருமணத்தால் இசைத்துறையில் இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது. அதுதான் குணதிலக குடும்பம் மற்றும் விக்கிரமசிங்க குடும்பம்.

ரூகாந்த குணதிலக்கவின் இளைய மகள்தான் விண்டி குணதிலக்க மற்றும் சங்கீத் விக்ரமசிங்கவின் மகன் சனுக விக்கிரமசிங்க இன்று திருமணம் செய்துகொண்டனர்.

விண்டி குணதிலகாவின் தாயார், பாடகி சந்திரலேகா பெரேரா, வார இதழ் ஒன்றுக்கு விண்டியின் திருமணம் குறித்து பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கையில்…

“அவரது பிறந்தநாள் டிசம்பர் 26 வருகிறது. அதே தினத்தில்  திருமணத்திற்கு  அவரே பரிந்துரைத்தார். அதனால் அனுமதித்தோம். பரஸ்பர புரிதலுடன் மரியாதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழுங்கள் எனும் அழகான வாழ்த்தும் கிடைத்தது.

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பாடலை இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.