கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனக் கடிதங்கள் இன்று (02.09.2020) ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 133 பயிலுனர்களும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 35 பயிலுனர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 47 பயிலுனர்களும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 52 பயிலுனர்களுமாக 267 பயிலுனர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் சேவைக்கு அறிக்கையிட்ட பயிலுனர்கள் என்றவகையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 117 பயிலுனர்களும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 32 பயிலுனர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 44 பயிலுனர்களும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 51 பயிலுனர்களுமாக 244 பயிலுனர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.