கோப்பாய் பொலிஸ் பிரிவில் கத்திமுனையில் பணம், நகை கொள்ளை!

யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த நால்வரைக் கொண்ட வன்முறைக் குழு, வாள்களைக் காட்டி மிரட்டி பணம், நகை, அலைபேசிகள் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்தக் கொள்ளைக் குழு உள்நுழைந்து வீட்டிலிருந்தவர்களைக் கயிற்றால் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

10 பவுண் நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் 3 அலைபேசிகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.