ஒரே குடும்பத்தில் ஆறு உயிர்களை காவுக்கொண்ட பல்லி.

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேரை கொண்ட குடும்பமொன்று பல்லியினால் உயிரிழந்துள்ளது.

ஜான் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரு உறவினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரவு உணவு உட்கொண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உணவில் விஷம் கலந்தமையே மரணத்திற்கான காரணம் எனவும் நைஜீரிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாமுவேல் உள்ளிட்ட குடும்பத்தினர் இரவு உணவிற்கு எடுத்துக்கொண்ட சூப் பானையில் பல்லியொன்று இறந்து கிடந்தமையை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.