ATM திருடர்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல்..

தென் மாகாணத்திலுள்ள மூன்று அரச வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மிகஹத்தனை பொலிஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் நிலைய பொறுப்பாளர் மற்றும் இரு வெளிநாட்டவர்களையும் விளக்கமறியலில் வைக்க பத்தேகம பிரதான நீதவான் எம். பி.ஜி.பெர்னாண்டோ உத்தரவிட்டார்.

பல்கேரிய பிரஜை ஜோர்ஜஸ் இவனோர், கனேடிய பிரஜை ஜோர்ஜ் அத்தடன், பொலிஸ் பரிசோதகர் அஞ்சான டி சில்வா, தெஹிவளையைச் சேர்ந்த ஆதம் லெப்பை யதிர் மற்றும் பெலவத்தை பத்தரமுல்லைச் சேர்ந்த அனுரகுமார ஜயரத்ன ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து சந்தேக நபர்களும் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று (10) காலை பத்தேகம பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொழும்பு ஹவ்லொக் பகுதியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பரிசோதகர், பிட்டிகல அமுகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் எல்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கடந்த (30) அதிகாலை 1.30 மணியளவில் ஹிக்கடுவ நகரில் அமைந்துள்ள அரச வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தில் CCTV கேமராவை மூடிவிட்டு நாற்பத்தாறு லட்சத்து எட்டாயிரம் ரூபாயை திருடியுள்ளனர்.

பின்னர், காலி கராபிட்டிய நகரில் அமைந்துள்ள ATM இயந்திரத்திலிருந்து இரண்டு இலட்சத்து, 75 ஆயிரம் ரூபாவும், அதேநாள் அதிகாலை ரூபாவும் 4.00 மணியளவில் பத்தேகம நகரிலுள்ள அரச வங்கியிலிருந்து 57 இலட்சமும் மோசடியாகப் பெறப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.