சிறை சென்று பிணையில் வந்த இளைஞர் சுட்டுப் படுகொலை!

பேலியகொடை, கலுபாலம பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 33 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சிறையிலிருந்து பிணையில் வீடு திரும்பியவர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.