முன்னாள் எம்.பி. தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!

யாழ்ப்பாணம் – உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் போராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு திருவுருவச் சிலையைத் திரைநீக்கம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.