நீர்த்தேக்கத்திலிருந்து ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் 28 வயதுடைய ஒருவரது சடலம் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட் வெர்னன் தோட்டத்தை சேர்ந்த சதீஷ்ராஜா (வயது 28) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் பணப்பை மற்றும் கைப்பை ஒன்று இருப்பதை கண்ட பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து , தலவாக்கலை பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் பணப்பை மற்றும் கைப்பை காணப்பட்ட அதே இடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தற்கொலையா அல்லது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்ததா என தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.