தேசிய சுதந்திர தினம்: தாய்நாட்டை நேசிப்பவர்கள் கரிநாளைக் கடைப்பிடிக்கார்! – இப்படிச் சொல்கின்றார் ரணில்.

“இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும் – தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்றோ – கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள். அப்படியானவர்கள் தேசிய சுதந்திர தின நிகழ்வை வைத்து அரசியல் நடத்தவும் மாட்டார்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வது – கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே. அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க – நாட்டை நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்” – என்று ரணில் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.