வீட்டில் அக்கா, தங்கை சடலங்களாக மீட்பு! – தாய் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பு.

கேகாலை, தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களைப் பொலிஸார் இன்று கண்டெடுத்துள்ளனர்.

51 மற்றும் 49 வயதுடைய இருவரும் சகோதரிகள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் மயக்கமடைந்த நிலையில் தெரணியகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகத் தெரணியகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.