வடக்கிலிருந்து கிழக்கிற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் பஸ் மீது கல் வீச்சு

கடந்த 7ஆம் திகதி அம்பாறை பிரதேசத்தில் வைத்து , வடக்கிலிருந்து கிழக்கிற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் பஸ் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கல் தாக்குதலால் பஸ்சில் பயணித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன் பஸ்சின் கண்ணாடியும் பலத்த சேதமடைந்துள்ளது.

இது தொடர்பில் அம்பாறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இருந்து மட்டக்களப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே மேற்படி தாக்குதலுக்கு உள்ளாகயுள்ளது.

நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறி, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் இந்தப் எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.