யாழ். நிகழ்வுகளுக்கு பிரதமர் தினேஷ் ஏன் வரவில்லை?

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துகொள்ளவில்லை.

பிரதமரின் பங்கேற்புடனேயே யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும் என்று அழைப்பிதழ்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

பொதுவில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மாத்திரமே பிரதமர் பங்கேற்பார் என்றும், ஏனைய நிகழ்வுகளில் அவர் ஜனாதிபதியுடன் கலந்துகொள்வதில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.