சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து இருவர் பலி

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெப்லோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாதாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் எல்லைக்குட்பட்ட டெப்லோ என்ற பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பேருந்து சுமார் 100 அடி உயரமான மலைப்பகுதியிலிருந்து கவிழ்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், காயமடைந்த சுமார் 30 பேர் நாவலப்பிட்டி மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த யாத்ரீகர்களை நோர்டன் பிரிட்ஜ் பொலிசார் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.