களனியில் மாணவர் போராட்டத்தை கலைக்க தண்ணீர் தாக்குதல் – ஆறு பேர் கைது

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (19) பிற்பகல் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தது.

கொழும்பு – கண்டி வீதியை மறித்து போராட்டம் நடத்திய பேரணியை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பிக்குகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.