ஜே.வி.பி உறுப்பினர்கள் எங்கள் குடும்பங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறார்கள் : வசந்த சமரசிங்க

நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் படையின் உறுப்பினர்கள் வீதியில் இறங்கி தேர்தலுக்காக போராடுவதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருந்தொகையான மக்கள் கொழும்புக்கு வரவுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்குமா என்பது தொடர்பில் மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுர குமார திஸாநாயக்கவுக்கு, ஆங்கிலம் பேசத் தெரியாது என்று சிலர் கூறியிருப்பது பழங்குடியினரின் செயல் என்றும், உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் எல்லோராலும் பேச முடியாது என்றும், அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் முழுநேர அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கட்சி உறுப்பினர்கள் வழங்குவதாகவும், அவர்கள் புத்தாண்டுக்கான ஆடைகளை கூட வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இணைய நேர்காணல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.