யாழ்.சாவகச்சேரியில் பெண்ணோடு, குழந்தையை ஒரு கும்பல் கடத்தியுள்ளது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்த பெண் ஒருவரையும் , சிறு குழந்தை ஒன்றையும் கடந்த 20ஆம் திகதி வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

வானில் வந்த நான்கு பேர் இவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வானுக்குள் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் , அவர்கள் வானில் இருந்து கதறிக் கொண்டிருந்ததாகவும் சம்பவத்தைப் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் கனடாவில் தொழில்புரிவதாகவும், அவர் நீண்டகாலமாக கனடாவில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது .

பெண்ணும் குழந்தையும் யாரால் கடத்தப்பட்டனர் என்பதுடன் கடத்தலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.