தன்னைத் தானே சுட்டு இராணுவச் சிப்பாய் உயிர்மாய்ப்பு!

இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பனாகொடை இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.