முச்சக்கர வண்டி சங்க தலைவர் அடித்துக்கொலை!

சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு மிரிஹான பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரான 53 வயதுடைய சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் அமைந்துள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.