மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் நிமல் அமரசிறியின் இறுதி நிகழ்வு இன்று

கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மக்கள் விடுதலை முன்னணியினரால் அழைப்பு விடுக்கப்பட்ட அரச எதிர்ப்புப் போராட்டத்தில், கண்ணீர் புகை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் அமரசிறி (60) அவர்களது இறுதிக் கிரியைகள் இன்று (01) நிவித்திகலடேயில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிவித்திகல உள்ளூராட்சி சபைக்கு , நிமல் அமரசிறி , மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.