கட்சி தாவிய 16 பேரை நீக்கத் தமிழ் அரசு நடவடிக்கை!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ள போதும் பிற கட்சிகளின் வேட்புமனுவில் போட்டியிடும் 16 பேரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிரந்தர உறுப்பினராக இருந்து கொண்டு பிற கட்சிகளில் போட்டியிடும் உறுப்பினர்களிடமே முதல் நடவடிக்கையாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்சியில் இருந்து விலக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் இராமலிங்கம் இராகினி உட்பட 16 உறுப்பினர்களுக்குக் கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளில் தற்போது அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கே கட்சியால் இவ்வாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துக்கு 14 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.