குட்டித் தேர்தல் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா? இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக நாளை கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்காகச் சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.