காதல் சண்டையால் ஒருவர் கொலை!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.