12 வயது மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது.

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை பாடசாலைக்கு அனுப்பாமல் , தனது காரில் ஹோட்டலுக்கு ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மயூரபுர ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை 29ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மயூரபுர ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றும் பிரியந்த என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். சந்தேக நபரின் மனைவியும் ஆசிரியையாவார்.

கடந்த 28ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற மகள் மாலை வரை வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு சிறுமி குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, கடந்த 28ம் தேதி மாணவி பள்ளிக்கு வரவில்லை என அதிபர் கூறியுள்ளார். மாணவியின் தந்தை, இது குறித்து தேடிய போது, மாணவி பல்லகஸ்வெவ பகுதியில் இருந்து கார் ஒன்றில் ஏறுவதை பார்த்ததாக, சிலர் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன்படி சிறுமியின் பெற்றோர் பல்லகஸ்வெவ சந்திக்கு செல்லும் போது சிறுமி வீட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளார். இது குறித்து மாணவியிடம் பெற்றோர் கேட்டபோது, தான் பிரியந்த சேருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதாக மாணவி தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஹோட்டல் அறையில் ஆசிரியர் முத்தம் மட்டுமே கொடுத்ததாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வைத்திய பரிசோதனைக்காக மாணவியை அழைத்துச் சென்று பரிசோதித்ததில் , அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் மாணவியுடன் காதல் உறவில் இருப்பதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாரிடமோ அல்லது அவரது தாயாரிடமோ தெரிவிக்காதிருந்துள்ளார் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆசிரியரைக் காப்பாற்றும் நோக்கில் மாணவி இந்த சம்பவத்தை மறைத்து விட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆசிரியர் கடந்த 28ஆம் திகதி விடுமுறை பெற்று , மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதியம் மீண்டும் பாடசாலைக்கு அருகில் இறக்கிவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மாணவி வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விபரம் அறிந்த தாய் , மகளையும் அழைத்துச் சென்று அம்பந்தொட்டை துறைமுக காவல்துறைக்கு வந்து இது குறித்து புகார் அளித்துள்ளார். குறிப்பிட்ட ஆசிரியருடன் ஹோட்டலுக்கு சென்ற கதையை மட்டுமே மகள் தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக போலீசார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது , ஆசிரியர் மாணவியை அழைத்து சென்றதாகவும், தவறு நடந்துள்ளதாகவும், தவறை ஒப்புக்கொள்கிறேன் என்றும், போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெரிவித்ததாக தெரியவருகிறது.

பலகஸ்வெவ, பாரகம, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் , மயூரபுர ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியே , சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான ஆசிரியரை பொலிஸார் கடந்த 29ஆம் திகதி மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.