விசேட தேவையுடையவருக்கான வலுப்படுத்தும் குழுக்களின் ஒன்று கூடல்.

சமுக சேவைகள் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் குழுக்களின் ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் தலைமையில் புதுக்குடியிருப்பு விவசாய திணைக்கள மண்டபத்தில் அகவணக்கத்துடன் காலை 09.30 மணிக்கு இக் கூட்டம் ஆரம்பமானது.

எமது பிரதேச மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இடர்கள் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

பிரதேச மட்டத்தில் இயன்றளவு மாற்றுத்திறனாளிகளின் தேவைப்பாடுகளை நிறைவேற்றவும், அவற்றை மாவட்ட ரீதியில் செயல்படுத்தவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பாடசாலைகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பிலும், இனிய வாழ்வு இல்ல மாணவர்களின் ஆசிரிய தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.