14 கோடி பெறுமதியான கஞ்சாவுடன் யாழ்.அனலைதீவு வாசிகள் இருவர் கடற்படையினரால் கைது

காங்கசன்துறை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படையின் நான்காவது விரைவு தாக்குதல் படையணியின் P423 விரைவு தாக்குதல் ரோந்து படகு மூலம் 14 கோடி 10 லட்சம் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு , இருவரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

டிங்கி படகு ஒன்றில் , பதின்மூன்று (13) உறைகளில் , 195 பார்சல்களில் அடைக்கப்பட்ட 428 கிலோ , 900 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் இன்று(03) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 33 மற்றும் 37 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் (02) யாழ்ப்பாணம் அனலதீவு தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

428 கிலோ 900 கிராம் கேரள கஞ்சா மற்றும் டிங்கி (01) ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க சந்தேகநபர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.