காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி.

காங்கோ நாட்டின் மசிசி மாகாணத்தின் பொலொவா கிராமத்தில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடி வருகிறோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மசிசி மாகாணத்தின் பிஹாம்ப்வே கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.