காதலனை விலங்கிட்டு , காதலியை கெடுத்து படம் பிடிக்க முயன்ற கான்ஸ்டபிள் கைது

சுற்றுலா சென்ற காதலர்களில் , காதலனை மோட்டார் சைக்கிளில் கைவிலங்கிட்டு விட்டு , 18 வயது காதலியை அருகில் உள்ள காட்டிற்கு இழுத்துச் சென்று, முழு நிர்வாணமாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, தனது கைபேசியில் நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முயன்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதாகியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவரை பின்னவல பொலிஸார் கடந்த 8ஆம் திகதி கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 வயதுடைய திருமணமானவர் ஒருவராகும். இவர் ஹம்பேகமுவ கொட்டவெஹெர மங்கட திபுலான பிரதேசத்தில் வசிப்பவராவார்.

பின்னவல பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் ஒருவன், தனது காதலியான 18 வயது யுவதியுடன் சமனலவெவ அணைக்கட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காதலர்கள் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது, ​​சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் வந்து தனது உத்தியோகபூர்வ பொலிஸ் ஐடியை காட்டி, தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்றும், போதைப்பொருள் இருக்கிறதா என சோதிக்க விரும்புவதாகவும் , அப்போது இருவரும் தங்களிடம் போதைப்பொருள் இல்லை என தெரிவத்ததாக கூறப்படுகிறது. முதலில் இருவரின் கைகளுக்கும் விலங்கிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் யுவதியின் கைவிலங்குகள் அகற்றப்பட்டு அந்த இளைஞனை, அதே இளைஞனது மோட்டார் சைக்கிளில் கைவிலங்கிடப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். அதன்பின் பொலிஸ் கான்ஸ்டபிள், இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டிற்கு இழுத்துச் சென்று, உடைகளை முற்றாக கழற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முயற்சித்ததாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் செயற்பட்ட சமனலவெவ காவற்துறை அதிகாரிகள் குழு அங்கு சென்று சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ததோடு, கைவிலங்கிடப்பட்ட இளைஞரை விடுவித்துள்ளனர். கைவிலங்குகள், கைத்தொலைபேசி மற்றும் சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

18 வயதுடைய யுவதி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக யுவதியிடமும், இளைஞனிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டதோடு , சந்தேக நபரான இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் சமனல குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.