புத்தரைக் காணவில்லை : பொலிஸில் நபர் ஒருவர் முறைப்பாடு !

வவுனியா செட்டிகுளம் பழைய புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் வைத்த புத்தர் சிலை காணாமல் போயுள்ளதாக கடந்த 10ஆம் திகதி செட்டிக்குளம் பொலிஸில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தர் சிலை காணாமல் போன விவகாரத்தில் பக்கத்து காணி தனக்கு சொந்தமானது என்பதால் அந்த பழி தன் மேல் வரும் என சந்தேகம் வராமல் இருக்க, பக்கத்து காணி உரிமையாளர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, புத்தர் சிலையை வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், செட்டிகுளம் மக்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.