சாக்கடை கிணற்றில் காரோடு விழுந்தவர் பலி.

கிழக்கு மலேசிய மாநிலமான சாபாவில் பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்டு இருந்த சாக்கடை கிணறு ஒன்றில் ஒரு கார் விழுந்துவிட்டது.

அந்த காரில் இருந்து ஆடவரின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. 40க்கும் அதிக வயதுள்ள அந்த ஆடவர், அந்தக் காரை ஓட்டிச் சென்று அந்தக் கிணற்றில் காரை இறக்கிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்குக் கடற்கரை மாவட்டமான சன்டகானில் இருக்கும் பண்டார் லெட்டாட்டில் உள்ள சாலை ஒன்றின் ஒரு பக்கமாக கிணறு இருந்தது.

பொதுப்பணித்துறை குழுவினருடன் சேர்ந்து தண்ணீரை வெளியே எடுத்து, ஆடவரின் உடல் மீட்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் பணித் துறை பேச்சாளர் தெரிவித்தார். அந்த ஆடவர் மாண்டுவிட்டதாக அதே இடத்தில் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.