பொலிஸ் வாகனத்துக்கு தீ வைத்த மூவர் சிக்கினர்.

கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி பொலிஸ் வாகனத்தைத் தாக்கி தீ வைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 ஆகிய இடங்களில் வசித்துவரும் 18, 31 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.