யாழ். நெடுந்தீவில் ஐவர் படுகொலை! தப்பிய பெண் வைத்தியசாலையில் …

யாழ்., நெடுந்தீவுப் பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந்தெரியாதோர் இந்தக் கொலையைப் புரிந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

வீட்டின் உரிமையாளர் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என 6 பேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர் ஒரு பெண் என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.