Xpress Pearlலை காக்க லஞ்சம் பெற்ற நபரின் விபரத்தை வெளியிட்ட நீதி அமைச்சர் (Video)

எக்ஸ்பிரஸ் பேர்லி கப்பலால் ஏற்பட்ட பாரிய கடல் மாசுபாட்டிற்கு நட்டஈடு வசூலிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட வழக்குகளைத் தவிர்ப்பதற்காக கடல் காப்புறுதி நிறுவனம், ஒருவருக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நபரின் பெயர் சாமர குணசேகர மற்றும் அவரது சர்வதேச வங்கி கணக்கு எண் (IBAN) Natwest Cot, 50000 இல் 154793334 ஆகும். GB 53 NW B K 50000015479234. BIC NW B K G 2L என்ற குறியீட்டின் ஊடாக இந்தக் கணக்கில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“முடிந்தால் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடுமாறு எனக்கு சவால் விடப்பட்டது. நீதி அமைச்சர் என்ற முறையில் நான் சட்டத்தை மதித்தேன். அதை இனி காவல்துறைதான் வெளிப்படுத்த வேண்டும். ”

“எனக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. எனக்கு தகவல் ஒன்றுதான் கிடைத்தது. இந்த வெளிப்பாட்டிற்கு நான் பொறுப்பேற்கவில்லை. இது ஒரு தகவல். இது ஆதாரமா இல்லையா என்று தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி இறுதி முடிவை தெரிவிக்கும் போது அது ஆதாரமா இல்லையா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த தகவலை வைத்து விசாரணை செய்து வருகிறார் என மேலும் தெரிவித்தார் அமைச்சர் .

Leave A Reply

Your email address will not be published.