வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் வெட்டிக்கொலை

மோதல் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளாகி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 24 வயதுடைய இளைஞன் இன்று (28) அதிகாலை இனந்தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கொலையாளி இளைஞனின் கழுத்தை அறுத்ததோடு, காலிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞன், மதவாச்சி, மன்னார் சந்தி பகுதியில் வசித்து வந்தவர், பலரால் தாக்கப்பட்டதால், நேற்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வைத்தியசாலையின் 11வது வார்டில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு 66வது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக இளைஞனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் அவர் இறந்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.