யானை தாக்கி காதலி மரணம்; காதலன் வைத்தியசாலையில்…. (புதிய இணைப்பு & Photos)

காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பண்டாரவளை – கொஸ்லாந்தை – மேல் தியலும பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காட்டு யானையின் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மாத்தறை, கேகனதுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தருஷி கவீஷா என்ற 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் தாதியர் கற்கை நெறியில் கல்வி கற்று வரும் இவர் வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனுடன் கொண்ட காதலின் பின் ,   பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. காயமடைந்த காதலன் குருநாகல் பகுதியில் விற்பனையகத்தில் பணிபுரிவதுடன், அவர் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் ஜோடியான இருவரும், தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மாத்தறை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியுமே குறித்த பகுதிக்குச் சுற்றுலா சென்ற நிலையில் இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.