இம்ரான் கானை கொல்ல சிறையில் தடுப்பூசி போடப்பட்டதா?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் இருந்தபோது தன்னை கொலை செய்யும் நோக்கில் தடுப்பு ஊசி போடப்பட்டதாக வெளியே வந்து தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை சிறையில் கொல்ல முயற்சிப்பதாக இம்ரான் குற்றம் சாட்டினார்.

கைது செய்யப்பட்ட பின்னர் கழிவறை வசதியின்றி 24 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இம்ரான் நேற்று (11) விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.