தங்க பதக்கங்களை பெற்ற, வடக்கின் குத்துச்சண்டை சாம்பியன்கள்

சர்வதேச கலப்பு குத்துச்சண்டைப் போட்டியில் வடமாகாண வீரர்களும் , வீராங்கனைகளும் 5 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தியாவின் காஷ்மீரில் 2023 மே 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது .

இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்களும் , வீராங்கனைகளும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் இப் போட்டியில் கலந்து கொண்டு வவுனியா திரும்பிய பின்னர் , வவுனியா கந்தசாமி கோவிலில் அவர்களை வரவேற்று ஆசிர்வதிக்கும் விசேட வைபவம் இடம்பெற்றது .

காஷ்மீரில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் சமூகநாதன் சஞ்சயன் , தட்சணாமூர்த்தி மகிஷா , ஜெயவர்தன செவ்வினி இமேஷா , முருகன் வினோத் , குமார் கிருஷாந்தன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் , சிவகுமார் தர்னிகா தங்கம் , இராமநாதன் திவ்யா தங்கம் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.