இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக எண்ணெய் குழாய் மற்றும் மின்சார கேபிள் அமைக்க இணக்கம்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சாரப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் விசேட மின் கேபிளை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை அண்மித்த ஆழம் குறைந்த கடலில் இந்த மின்சார கேபிளை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு எரிபொருளை கொண்டு வருவதற்காக இந்தியாவில் இருந்து பூமிக்கடியில் எரிபொருள் குழாய் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கு சுமார் 800 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.