சீனாவின் மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்து- 39 மீனவர்களை தேடும் பணி தீவிரம்.

சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து மூழ்கியது. இதில், அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் மாயமாகி உள்ளனர். இதனிடையே மாயமானவர்களை தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு உதவிகளை நாடி சீன அதிபர் அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.