நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுதலை!

வெளிநாட்டில் இருந்து மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் நாட்டுக்கு வந்த முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்

நேற்று (செவ்வாய்க்கிழமை) டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அவர் நாடு திரும்பினார்.

இதன்போது மூன்றரை கிலோகிராம் தங்கத்துடனும் 91 ஸ்மார்ட் தொலைபேசிகளையும் கொண்டு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் சுங்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 7.5 மில்லியன் ரூபாய் அபாரதம் விதித்து அவரை விடுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.