தொலைபேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற 2 இளைஞர்கள் பலி.

வதுருவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (25) அதிகாலை கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு மேற்கொண்டு நடந்து சென்ற இரு இளைஞர்கள் புகையிரதத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வேயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

வேயங்கொட வதுருவ பிரதேசத்தில் வசிக்கும் 18 வயது மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் புகையிரத பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையில், இருவரும் காலை சுற்றுலா ஒன்று செல்ல தயாராகி புகையிரத பாதை வழியாக வதுருவ புகையிரத நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் இருவரும் தொலைபேசி பேசிக் கொண்டே பயணித்த போது பின்னால் வந்த புகையிரதம் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.