மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை – விசேட பொலிஸ் குழுவை நிறுவ ஜனாதிபதி பணிப்புரை.

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசைச் சீர்குலைக்கும் வகையில், சில குழுக்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன என்று ஜனாதிபதிக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதிக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய புதிய பொலிஸ் குழுவொன்ற மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.