எந்தத் தேர்தலுக்கும் சஜித் கட்சி தயாராம் – தலதா தெரிவிப்பு.

எந்தத் தேர்தலுக்கும் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயார். சில வேளை ஜனாதிபதி தேர்தலைக் காட்டி காட்டி வேறு தேர்தலையும் நடத்த வாய்ப்புண்டு.

காட்டுவதே கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்த ஆட்கள்தானே. ரணிலைப் பற்றி நன்றாகத் தெரியும்.

எப்படியும் உரிய நேரத்தில்தான் ஜனாதிபதித் தேர்தல் வரும். அதற்கு முன் வேறு தேர்தல் வருவதற்கே வாய்ப்புகள் அதிகம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.