யாழில் வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு! – இளைஞர் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அச்சுவேலி மேற்கில் உள்ள வீடொன்றை அவர்கள் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

அதன்போது வீட்டில் இருந்து 4 கஜேந்திரா வாள்களை அவர்கள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த இளைஞர் ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர்.

கைது செய்த இளைஞரையும் , மீட்கப்பட்ட கூரிய ஆயுதங்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.