தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் திடீர் இராஜிநாமா!

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க அறிவித்துள்ளார்.

பௌத்தசாசன, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இதனை அவர் அறிவித்துள்ளார்.

இந்தத் தகவலை பௌத்தசாசன, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.