இத்தாலி முன்னாள் பிரதமர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை இத்தாலியின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், சில்வியோ வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கொரோனா பாதிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட சில்வியோ சிகிச்சைக்கு பின் உடல்நலம் பெற்றிருந்தார். ஆனால், 86 வயதான சில்வியோ இன்று உயிரிழந்தார். இத்தாலி முன்னாள் பிரதமரின் மறைவிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.