மணியந்தோட்டம் விளையாட்டுக் கழக அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

யாழ். கால்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 7 பேர் பங்கு பங்கு பற்றும் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் இன்று 10 ஆம் திகதி வியாழக் கிழமை அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் ஆரம்பமாகியது.
முதலாவது ஆட்டத்தில் மணியந்தோட்டம் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அண்ணா ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதியது.

முதற்பாதி ஆட்ட நேர முடிவில் மணியந்தோட்டம் விளையாட்டுக் கழக அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.இதில் மணியந்தோட்டம் விளையாட்டுக் கழக அணி சார்பில். அருண், தயாளன் ஆகியோரும், அண்ணா ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி சார்பில் வினோத்தும்,கோலினை பதிவு செய்தனர்.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது
மணியந்தோட்டம் விளையாட்டுக் கழக அணி சார்பில்.எபேக்சன், கோலினை பதிவு செய்தனர். ஆட்ட நேர முடிவில்மணியந்தோட்டம் விளையாட்டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Leave A Reply

Your email address will not be published.