அடுத்த 1000 கோடி ரூபாய் வசூல் படம்.. ராஜமௌலியின் அடுத்த பட அறிவிப்பு தினம்.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்கள் சர்வ சாதாரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அவருடைய அடுத்த 1000 கோடி ரூபாய் வசூல் படம் என்று எதிர்பார்க்கப்படும் மகேஷ்பாபுவின் 29 ஆவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி அவரது பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’இந்தியானா ஜோன்ஸ்’ படத்தின் பாணியில் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் அட்வென்சர் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் ஏராளமான மிருகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதையை அமைக்கும் பணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் மகேஷ் பாபுவை தவிர இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து எந்தவிதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அமீர் கான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியும் உறுதிப்படுத்தாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் மற்றும் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராஜமெளலி-மகேஷ் பாபு திரைப்படம் நிச்சயம் இன்னொரு 1000 கோடி ரூபாய் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.