மோடியைச் சந்திக்க ரணிலுடன் ஜீவனும் இந்தியா பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இந்தியா செல்கின்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது’ மலையகம் – 200′ தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘மலையகம் – 200′ நிகழ்வுக்கு இந்தியப் பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் இதன்போது விடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது.
……..மோடியைச் சந்திக்க ரணிலுடன் ஜீவனும் இந்தியா பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இந்தியா செல்கின்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது’ மலையகம் – 200′ தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘மலையகம் – 200’ நிகழ்வுக்கு இந்தியப் பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் இதன்போது விடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.