கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளராக மதன் நியமனம்!

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளராக ஏ.பி. மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து ஏ.பி. மதன் தனது கடமைகளைக் திருகோணமலை காரியாலயத்தில் இன்று பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளராகப் பதவியேற்றுள்ள ஏ.பி. மதன், ‘தமிழ் மிரா்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.