கிழக்கு லடாக் மலைத்தொடரை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய இராணுவம்.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள உயரமான சிகரங்களை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

லடாக் எல்லையில் சீனா 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள நிலையில் அதற்கு ஈடாக இந்தியாவும் 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் மிக உயரமான சிகரங்களை சீனாவிடமிருந்து மீட்டு மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதி இப்போது இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க சீனா மறுத்து வந்தது. பிரிகேடியர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

தொலைத் தொடர்பு இணைப்பை தயார்நிலையில் வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டபோதும், படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை

Leave A Reply

Your email address will not be published.